63 நாயன்மார்கள்
நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
அறிவிப்புகள்
🙏 Nayanmar
பூசலார் நாயனார்
Pooja Day
ஐப்பசி - அனுஷம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருநின்றவூர்
முக்தித்தலம் : திருநின்றவூர்
பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.
🙏 Nayanmar
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
Pooja Day
ஐப்பசி - மூலம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)
முக்தித்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)
மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.
🙏 Nayanmar
கணம்புல்ல நாயனார்
Pooja Day
கார்த்திகை - கார்த்திகை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : பேளூர் (இருக்குவேளூர் )
முக்தித்தலம் : திருப்புலீச்சரம்
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்.
🙏 Nayanmar
மெய்ப்பொருள் நாயனார்
Pooja Day
கார்த்திகை - உத்திரம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருக்கோவிலூர்
முக்தித்தலம் : திருக்கோவிலூர்
தன்னுடைய பகைவன் போலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும் சாகும் தறுவாயிலும் சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.
🙏 Nayanmar
ஆனாய நாயனார்
Pooja Day
கார்த்திகை - அஸ்தம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருமங்கலம்
முக்தித்தலம் : திருமங்கலம்
புல்லாங்குழல் ஓசையில் பக்தியை வெளிப்படுத்தியவர்.
🙏 Nayanmar
மூர்க்க நாயனார்
Pooja Day
கார்த்திகை - மூலம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருவேற்காடு
முக்தித்தலம் : குடமூக்கு (கும்பகோணம்)
சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.
🙏 Nayanmar
சிறப்புலி நாயனார்
Pooja Day
கார்த்திகை - பூராடம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : ஆக்கூர்
முக்தித்தலம் : ஆக்கூர்
சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
🙏 Nayanmar
வாயிலார் நாயனார்
Pooja Day
மார்கழி - ரேவதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருமயிலை
முக்தித்தலம் : திருமயிலை
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.
🙏 Nayanmar
சாக்கிய நாயனார்
Pooja Day
மார்கழி - பூராடம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருச்சங்கமங்கை
(கோனேரிக்குப்பம்)
முக்தித்தலம் : திருச்சங்கமங்கை
அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.
🙏 Nayanmar
சடைய நாயனார்
Pooja Day
மார்கழி - திருவாதிரை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருநாவலூர்
முக்தித்தலம் : திருநாவலூர்
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
🙏 Nayanmar
இயற்பகை நாயனார்
Pooja Day
மார்கழி - உத்திரம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : பல்லவனீச்சரம்
முக்தித்தலம் : திருச்சாய்க்காடு
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
🙏 Nayanmar
மானக்கஞ்சாற நாயனார்
Pooja Day
மார்கழி - சுவாதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : கஞ்சாறூர் (ஆனந்தத்தாண்டவபுரம்)
முக்தித்தலம் : கஞ்சாறூர் (ஆனந்தத்தாண்டவபுரம்)
தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும் சிவனடியார் கேட்க மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை