63 நாயன்மார்கள்
நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
அறிவிப்புகள்
🙏 Nayanmar
திருநாளைப்போவார் நாயனார்
Pooja Day
புரட்டாசி - ரோகிணி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : ஆதனுர்
முக்தித்தலம் : தில்லை
தாழ்ந்த குலமென்பதால் கோவிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன் தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் சென்று ஈசன் அருள் பெற்றவர்.
🙏 Nayanmar
திருமூல நாயனார்
Pooja Day
ஐப்பசி - அசுவினி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : சாத்தனுர்
முக்தித்தலம் : திருவாவடுதுறை
திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.
🙏 Nayanmar
நின்றசீர் நெடுமாற நாயனார்
Pooja Day
ஐப்பசி - பரணி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : மதுரை
முக்தித்தலம் : மதுரை
திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
🙏 Nayanmar
இடங்கழி நாயனார்
Pooja Day
ஐப்பசி - கார்த்திகை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : கொடும்பாளூர்
முக்தித்தலம் : கொடும்பாளூர்
அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.
🙏 Nayanmar
சத்தி நாயனார்
Pooja Day
ஐப்பசி - பூசம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : வரிஞ்சையூர்
முக்தித்தலம் : வரிஞ்சையூர்
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
🙏 Nayanmar
பூசலார் நாயனார்
Pooja Day
ஐப்பசி - அனுஷம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருநின்றவூர்
முக்தித்தலம் : திருநின்றவூர்
பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.
🙏 Nayanmar
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
Pooja Day
ஐப்பசி - மூலம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)
முக்தித்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)
மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.
🙏 Nayanmar
கணம்புல்ல நாயனார்
Pooja Day
கார்த்திகை - கார்த்திகை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : பேளூர் (இருக்குவேளூர் )
முக்தித்தலம் : திருப்புலீச்சரம்
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்.
🙏 Nayanmar
மெய்ப்பொருள் நாயனார்
Pooja Day
கார்த்திகை - உத்திரம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருக்கோவிலூர்
முக்தித்தலம் : திருக்கோவிலூர்
தன்னுடைய பகைவன் போலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும் சாகும் தறுவாயிலும் சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.
🙏 Nayanmar
ஆனாய நாயனார்
Pooja Day
கார்த்திகை - அஸ்தம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருமங்கலம்
முக்தித்தலம் : திருமங்கலம்
புல்லாங்குழல் ஓசையில் பக்தியை வெளிப்படுத்தியவர்.
🙏 Nayanmar
மூர்க்க நாயனார்
Pooja Day
கார்த்திகை - மூலம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருவேற்காடு
முக்தித்தலம் : குடமூக்கு (கும்பகோணம்)
சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.
🙏 Nayanmar
சிறப்புலி நாயனார்
Pooja Day
கார்த்திகை - பூராடம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : ஆக்கூர்
முக்தித்தலம் : ஆக்கூர்
சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை