63 நாயன்மார்கள்
நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
அறிவிப்புகள்
🙏 Nayanmar
மாணிக்கவாசகர்
Pooja Day
ஆனி - மகம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருவாதவூர்
முக்தித்தலம் : தில்லை
மானுட தேகம் எடுத்து இறைவனாகும் தன்மை பெற்றவர். உயிர்கள் உய்யும் பொருட்டு திருவாசம் அருளியவர்.
🙏 Nayanmar
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
Pooja Day
ஆனி - ரேவதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : பெருமங்கலம்
முக்தித்தலம் : பெருமங்கலம்
இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.
🙏 Nayanmar
பெருமிழலைக் குறும்ப நாயனார்
Pooja Day
ஆடி - சித்திரை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : மிழலை (தேவமலை)
முக்தித்தலம் : மிழலை /ஆரூர் ?
சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர். சுந்தரருடன் கயிலை சென்றவர்.
🙏 Nayanmar
கழறிற்று அறிவார் நாயனார் (சேரமான் பெருமான் )
Pooja Day
ஆடி - சுவாதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : கொடுங்கோளூர்
முக்தித்தலம் : திருவஞ்சைக்களம்
சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.
🙏 Nayanmar
சுந்தரமூர்த்தி நாயனார்
Pooja Day
ஆடி - சுவாதி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருநாவலூர்
முக்தித்தலம் : திருவஞ்சைக்களம்
தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.
🙏 Nayanmar
கலிய நாயனார்
Pooja Day
ஆடி - கேட்டை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருவொற்றியூர்
முக்தித்தலம் : திருவொற்றியூர்
வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.
🙏 Nayanmar
கோட்புலி நாயனார்
Pooja Day
ஆடி - கேட்டை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருநாட்டியத்தான்குடி
முக்தித்தலம் : திருநாட்டியத்தான்குடி
🙏 Nayanmar
மூர்த்தி நாயனார்
Pooja Day
ஆடி - கார்த்திகை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : மதுரை
முக்தித்தலம் : மதுரை
சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு உருத்திராட்சம் சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.
🙏 Nayanmar
புகழ்ச்சோழ நாயனார்
Pooja Day
ஆடி - கிருத்திகை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : உறையூர்
முக்தித்தலம் : கருவூர் (கரூர்)
எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.
🙏 Nayanmar
கூற்றுவ நாயனார்
Pooja Day
ஆடி - திருவாதிரை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : களப்பால்
முக்தித்தலம் : களந்தை (களப்பால் - கோயில்களப்பால்)
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.
🙏 Nayanmar
குலச்சிறை நாயனார்
Pooja Day
ஆவணி - அனுஷம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : மணமேற்குடி
முக்தித்தலம் : மதுரை ?
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.
🙏 Nayanmar
குங்கிலிய கலய நாயனார்
Pooja Day
ஆவணி - மூலம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருக்கடவூர்
முக்தித்தலம் : திருக்கடவூர்
சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை