63 நாயன்மார்கள்
நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
அறிவிப்புகள்
🙏 Nayanmar
செருத்துணை நாயனார்
Pooja Day
ஆவணி - பூசம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : கீழ்த்தஞ்சாவூர்
முக்தித்தலம் : ஆரூர்
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.
🙏 Nayanmar
அதிபத்த நாயனார்
Pooja Day
ஆவணி - ஆயில்யம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருநாகை
முக்தித்தலம் : திருநாகை
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். ஒரே ஒரு பொன் மீன் கிடைத்தும் அதையும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
🙏 Nayanmar
புகழ்த்துணை நாயனார்
Pooja Day
ஆவணி - ஆயில்யம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : அரிசிற்கரைப்புத்தூர்
முக்தித்தலம் : அரிசிற்கரைப்புத்தூர்
வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.
🙏 Nayanmar
இளையான்குடிமாற நாயனார்
Pooja Day
ஆவணி - மகம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : இளையான்குடி
முக்தித்தலம் : இளையான்குடி
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் தன்னுடைய வீட்டுக் அறுத்தவர். விறகாக கூரையை சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
🙏 Nayanmar
ஏனாதிநாத நாயனார்
Pooja Day
புரட்டாசி உத்திராடம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : ஏனநல்லுர்
முக்தித்தலம் : ஏனநல்லுர்
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
🙏 Nayanmar
நரசிங்க முனையரைய நாயனார்
Pooja Day
புரட்டாசி - சதயம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : திருநாவலூர்
முக்தித்தலம் : திருநாவலூர்
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.
🙏 Nayanmar
உருத்திர பசுபதி நாயனார்
Pooja Day
புரட்டாசி - அசுவினி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : தலையூர்
முக்தித்தலம் : தலையூர்
கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.
🙏 Nayanmar
திருநாளைப்போவார் நாயனார்
Pooja Day
புரட்டாசி - ரோகிணி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : ஆதனுர்
முக்தித்தலம் : தில்லை
தாழ்ந்த குலமென்பதால் கோவிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன் தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் சென்று ஈசன் அருள் பெற்றவர்.
🙏 Nayanmar
திருமூல நாயனார்
Pooja Day
ஐப்பசி - அசுவினி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : சாத்தனுர்
முக்தித்தலம் : திருவாவடுதுறை
திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.
🙏 Nayanmar
நின்றசீர் நெடுமாற நாயனார்
Pooja Day
ஐப்பசி - பரணி
பூஜை நேரம்
அவதாரத்தலம் : மதுரை
முக்தித்தலம் : மதுரை
திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
🙏 Nayanmar
இடங்கழி நாயனார்
Pooja Day
ஐப்பசி - கார்த்திகை
பூஜை நேரம்
அவதாரத்தலம் : கொடும்பாளூர்
முக்தித்தலம் : கொடும்பாளூர்
அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.
🙏 Nayanmar
சத்தி நாயனார்
Pooja Day
ஐப்பசி - பூசம்
பூஜை நேரம்
அவதாரத்தலம் : வரிஞ்சையூர்
முக்தித்தலம் : வரிஞ்சையூர்
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை